Posts
Ayya History
- Get link
- Other Apps
அய்யாதுணை கொல்லம் ஆண்டு 1008க்கு முன்பாக கலியுக கொடுமைகள் தாங்ககாத தேவர்களும், முனிவர்களும் பச்சிபறவை முதல் ஜீவன் தங்களைப்படைத்த பரம்பொருளை வேண்டி கலிகொடுமையில் இருந்து விடுதலைபெற முறையிட்டார்கள். ஒவ்வொரு யுகத்திலும் தர்மத்தை சீர்குலைத்துவந்த அசுரர்களை இறைவன் அவதாரம் எடுத்து வந்து அவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். ஆனால் இந்த கலியுகத்திலே கலியன் உருவம் இல்லாதவனாக தோன்றினான். கலியன் ஒவ்வொருவருடைய எண்ண அலைகளை ஆட்கொண்டான். ஆதலால் இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களும், கலிமாய எண்ணத்தோடு தோன்றிவிட்டன. கலியை முன்நின்று வெல்ல மூவராலும் இயலாது என்ற நிலையை உணர்ந்த இறைவன் அனைத்து சக்திகளையும் தன்னகப்படுத்தி பிரிவில்லா ஒரு பொருளால் கலியை வெல்லலாம் தர்மத்தை நிலைநாட்டலாம் என்று முடிவுக்கு வந்தனர்.அதுமட்டுல்லாது அகில வேதசட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை தேவர்களை மீண்டும் தர்மயுக ராஜியத்தில் வாழவைக்க எண்ணினார்.அதன் காரணமாக தனக்காகும் பேர்களை அடையாளம் காணவும் அகில வேத சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர் களை காத்திடவும். உலகாளும் தேவன் ஆதிமூலப் பரம்பொருள் 1008 ஆம் ஆண்டு மாசி திங்கள் 20ம்
Ayya wiki
- Get link
- Other Apps
Ayyavazhi news in Wikipedia About Ayya Vazhi ”என்னை ஒரு புத்தியாய் உள் அன்பு கொண்டோருக்கு புது புத்தி ஈந்து பூவுலகை ஆள வைப்பேன்” ஒவ்வொரு நிமிடமும் பக்தியை வளர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இதயத்தின் உள்ளிருக்கும் அய்யா வை நாம் உணரவேண்டும். ஒரு காரியத்திற்காக அய்யாவை வேண்டுதல் கூடாது. “நான் இதைத் தருகிறேன் அதைத் தருகிறேன் உன் கோவிலுக்கு வருகிறேன்’ என்று பேரம் பேசக்கூடாது…“எனக்கு பக்தியைக் கொடு கடவுளே உன் நினைவைக் கொடு என்ற வைராக்கியம் வேண்டும்’ என்று தொடர்ந்து வேண்ட வேண்டும். அவனருளால்தான் அவன் தாளை நினைக்க முடியும் என்கிறது அகிலம்… அய்யா மட்டும்தான் உங்களுக்கு பக்தியையும் வைராக்கியத்தையும் தரமுடியும். அந்தமாதிரி பக்குவத்தைக் குடுங்கன்னு அய்யாவை கெட்டியா புடிச்சிட்டு பக்தி வேணும்னு உருகி விடாது பக்தி செலுத்தினால் உண்மையில் அய்யாவின் அருள் நிச்சியமாக கிடைக்கும்…, இந்த முயற்சியே நம்மை வழிப்படுத்தும்… ஒவ்வொரு நொடியும் அய்யாவை நினைத்து வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தால் அதுதான் உண்மையான பக்தி. If you move the mouse over the paragraph above,